districts

img

மாஞ்சோலை மலையில் நீடிக்கும் மழை

திருநெல்வேலி, செப். 17- நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.   மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 4 மில்லி மீட்டரும், களக்காட்டில் 3.20 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் சாரல் மழை பெய்தது.