கும்பகோணம், மே 9-
கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர் மழை யால் பருத்தி பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் இந்தாண்டு அதிகபட்ச விலை கிடைக்குமா என விவ சாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சமா ளிக்க வசதியாக பருத்தி செடிகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் பருத்தி விதை களை விதைத்து ஜூன் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் பருத்தி அறுவடை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் திருப்பனந்தாள் சுற்று வட்டார பகுதியில் பரவலாக பெய்து வரு கிறது. கும்பகோணம் பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகு படி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகள் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரால் பருத்திச் செடிகள் அழுகி மொட்டுகள் உதிர்ந்து, பூச்சிகளால் நோய்கள் ஏற்பட்டு பருத்தி மகசூல் பாதிக்கும் நிலை ஏற் பட்டுள்ளது. இதனால் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், “ கடந்த ஆண்டு பருத்திக்கு நல்ல விலை கிடைத்த தால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 50 சதவீதத்துக்கு அதிகமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தொடர் மழையால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை இழப்பு ஏற்படக்கூடும். இந்த ஆண்டு அதிகபட்ச விலை பருத்திக்கு கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள் ளோம்” என்றனர்.
தவிர கும்பகோணம் பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் அறுவடை முடிந்து ஒரு சில விவசாயிகள் கோடை நடவாக குறு கிய கால நெற்பயிர்களை சாகுபடி செய் துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.