districts

img

கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாராட்டு

தஞ்சாவூர், ஜன.31 - தஞ்சாவூரில் கடந்த 1967 செப்.12  ஆம் தேதி மறைந்த முன்னாள் முத லமைச்சர் காமராஜரால், கல்லுக் குளம் பகுதியில் நகராட்சி மருந்த கம் திறக்கப்பட்டது. பிறகு,  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மாக தரம் உயர்த்தப்பட்டது.   கடந்த 2023 இல் தில்லி மருத் துவக் குழுவினரால் தேசிய தரச்  சான்று பெற்றது. அதற்காக வழங் கப்பட்ட ரூ.3 லட்சம் பரிசுத்தொகை மருத்துவமனை வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.   இம்மருத்துவமனையில், நாள்  ஒன்றுக்கு சுமார் 60 முதல் 70  கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை,  ஆலோசனை பெற்று வருகிறார். தாய்-சேய் நல கண்காணிப்பு மை யம், கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு மற்றும் யோகா வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகிறது.   கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து, பாலிகிளினிக் எனப்படும் சிறப்பு மருத்துவர்கள் மூலம் இதுவரை 22,124 பேருக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொற்றா நோயான உயர்ரத்த அழுத் தம், சர்க்கரை, மார்பகப் புற்று, கருப்பை வாய் புற்றுநோயாளிகள் என சுமார் 26 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பரி சோதனைக்கு வரும் கர்ப்பிணி களின் நேரத்தை பயனுள்ளதாக வும், நல்ல மன நிலையை உரு வாக்கவும் 600 புத்தகங்களை கொண்ட தாய்மை நூலகம் திறக்கப் பட்டுள்ளது.   இந்நிலையில், தமிழக அர சின் பொது சுகாதாரம் மற்றும் நோய்  தடுப்பு மருந்துத்துறை சார்பில்,  ஒவ்வொரு மாதமும் 19 சுகா தார குறியீடுகள் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தரவரிசை பட்டியல் மாநில அள வில் வெளியிடப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர்  மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தர  வரிசைப் பட்டியலில், கல்லுகுளம்  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யம் மாநில அளவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடம் பெற்றுள்ளது. மாலை மரியாதை இதையடுத்து தஞ்சாவூர் மாநக ராட்சி சார்பில், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமி ஷனர் மகேஸ்வரி, நகர்நல அலுவ லர் சுபாஷ் காந்தி, மாநகராட்சி பணி யாளர்கள், கவுன்சிலர்கள் ஆகி யோர் மலர் மாலைகள், மலர்க் கிரீடம், பழங்கள், இனிப்புகள் ஆகிய பொருட்களை மேள தாளத் துடன் சுமார் 2 கிலோ மீட்டருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அங்கு, கல்லுக்குளம் நகர்ப்புற  ஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர் முத்துக்குமார் தலைமையி லான மருத்துவர்கள், செவிலியர் கள், தூய்மைப் பணியாளர்கள் 30  பேருக்கும் மாலை அணிவித்து,  சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டது.