பெரம்பலூர், ஆக.1-
எழுத்தாளரும் பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி மணிப்பூர் வன்முறை குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இரு சமூகத்தினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலும் பேசினார். இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் வகை யிலும் பேசினார். இதையடுத்து பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜூலை 29 அன்று பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, தமிழ்நாடு காவல்துறை மனுத் தாக்கல் செய்தது. பத்ரி சேஷாத்ரி தரப்பில் ஜாமீன் கோரியும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று இந்த இரண்டு மனுக்களும் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதி கவிதா, இந்த வழக்கில் பத்ரி சேஷாத்ரியை காவ லில் எடுத்து விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்து நிராகரித்ததுடன், பத்ரி சேஷாத்ரியை நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்க உத்தர விட்டுள்ளார்.