districts

img

நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, அங்காடிகளில் ஆய்வு

மயிலாடுதுறை, பிப்.27 -  மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோயில் அருகே யுள்ள  கிடாரங்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் மாவட்ட வழங்கல் அலுவ லர் வெள்ளிக்கிழமை ஆய்வு  மேற்கொண்டார்.  அந்த கிடங்கிலிருந்து தான் தரங்கம்பாடி வட்டத் தில் உள்ள 90 நியாய விலை  கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் நகர்வு செய்யப் பட்டு வருகிறது. பிப்ரவரி மாதத்திற்கான நகர்வுக்கு கடந்த 22.2.2022 அன்று நிறைவு பெற்றதை தொடர்ந்து, மார்ச் மாதத்திற்கான நகர்வு பணிகள் கடந்த பிப்.23 ஆம் தேதி முதல் நடைபெற்று வருவதாகவும், நகர்வு பணி யினை மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் கிருஷ்ணன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.  ஆய்வின்போது அரிசி யின் தரம் மற்றும் நியாய விலை கடைகளுக்கு அனுப்பி  வைக்கப்படும் அரிசி மூட்டை களின் எடை குறித்தும் ஆய்வு  செய்தார். தரங்கம்பாடி வட்ட  வழங்கல் அலுவலர் பாபு, கிடங்கு உதவி தரக் கட்டுப் பாட்டு அலுவலர் ராகவன், வட்ட பொறியாளர் ஐயப்பன், கிடங்கு நகர்வு எழுத்தர்கள் உடனிருந்தனர்.  ஆய்வினை தொடர்ந்து செம்பனார்கோயில் ஒன்றி யத்திற்குட்பட்ட பரசலூர், பொன்செய், செம்பனார்கோ யில் பகுதிகளிலுள்ள நியாய  விலைக் கடைகளிலும் மாவட்ட  வழங்கல் அலுவலர்  ஆய்வு  மேற்கொண்டார்.