திருச்சிராப்பள்ளி, ஆக.7-
திருச்சி - தஞ்சை சாலையில் அணுகு சாலை அமைக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட் டச் செயலாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை இரண்டு பக்கமும் அணுகுச் சாலை (சர்வீஸ் ரோடு) இல்லா மல், நான்கு வழிச் சாலையாக அமைக் கப்பட்டுள்ளது.
இதனால் 50-க்கும் மேற்பட்ட இடங்க ளில் தெருச் சாலைகள் நேரிடையாக அதிவேக (எக்ஸ்பிரஸ்) சாலையில் இணையும் விதமாகவும், துப்பாக்கி தொழிற்சாலை, பெல் நிறுவனம், எச்ஏ பிபி தொழிற்சாலை, நூற்றுக்கணக் கான சிறு தொழில் நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பொதுமக்கள் என பல ஆயிரம் பேர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
1424 பேர் பலி
இந்நிலையில், எந்தவித பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்காமல் நான்கு வழிச்சாலை விதிகளை புறக்க ணித்து, 14.49 கி.மீ தூரம் வரை படு மோசமாக இச்சாலை அமைக்கப் பட்டுள்ளது. இதன் விளைவாக தமி ழகத்திலேயே மிக அதிக மனித உயிர் களை பழிவாங்கும் சாலையாக இது விளங்குகிறது.
மேற்கண்ட சாலையில் 2006ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 1,424 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 3000 பேர் நிரந்தர ஊனம் அடைந்ததாகவும், 10,186 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதவிர ஆடு, மாடு கள், வளர்ப்பு பிராணிகள் வாகனங்க ளில் சிக்கி உயிரிழந்திருப்பதும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட் கப்பட்ட விபரங்கள் மூலம் தெரிய வரு கிறது.
சட்டமன்றத்தில்...
இதனால் அப்பகுதியில் குடியி ருந்து வரும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து திருச்சி - தஞ்சை அணுகு (சர்வீஸ்) சாலை மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி, தொடர்ச்சி யாக பல போராட்டங்களை நடத்தி, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்தப் பின்னணியில் தமிழக அரசு 2018ஆம் ஆண்டு ரூ.84.50 கோடி ஒதுக்கீடு செய்து சில கட்டிட உரிமையா ளர்கள் தடையாணையை நீக்கிய பிறகு, சாலை அமைக்கப்படும் என அன்றைய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பின ரும் இன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி 15.6.2018இல் சட்ட மன்றத்தில் பேசினார்.
இதுகுறித்த வழக்கில், 15.10. 2019 அன்று 6 மாத காலத்திற்குள் தேவைப்படும் நிலங்களை கைய கப்படுத்தி தேசிய நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகும் தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணி யை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்து கிறது. இவ்வாறு மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாத ஒரு சில வணிக அமைப்புகளின் கோரிக்கை பின்னால் செல்வது ஏற்புடையதல்ல.
நீதிமன்ற உத்தரவு
மீறல் மேலும் 15 கி.மீ உயர்மட்ட பாலம் அமைப்பது போன்ற திசை திருப்பும் அறிவிப்புகள் “போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்”. சர்வீஸ் சாலையை முடக்கும் நோக்கிலேயே உள்ளது. அதேபோல் மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை, உயர் அதிகாரிகள் தொடர்ச்சி யாக கண்டு கொள்ளாமல் இருப்பதும், நிலம் கையகப்படுத்தும் பணியை செய் யாமல் இருப்பதும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து உயர்மட்ட பறக்கும் சாலை அமைத்தால் அதன் கீழ் உள்ள வர்த்தக நிறுவனங்கள் செயலிழக்கும். வணிகம் கடும் பாதிப்படைவதோடு மேம்பாலத் தின் கீழ் உள்ள நிலங்கள், வீடுகள், கட்டி டங்கள் பெருமளவு மதிப்பிழக்கும் நிலை ஏற்படும்.
எனவே தமிழக முதல்வர் இப்பிரச்ச னையில் தலையிட்டு திருச்சி - தஞ்சை சாலையில் அணுகு சாலை அமைக்க வேண்டும். விதிகளுக்கு புறம்பாக அமைத்த மேற்கண்ட சாலையில் சுங்கச் சாவடி அமைத்து, வாகன வசூல் செய் வதை அணுகு சாலை அமைக்கும் வரை தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் வலி யுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.