districts

காவலர்கள் கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம், ஏப்.21-  

   தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் பூரணி தலைமையில் காவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.  

   கூட்டத்தில், பாபநாசம் ஊரக உட்கோட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், கோயில் களில் திருவிழாக்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நேராத வண்ணம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். மேலும் சாலை விதிகளை கடைப்பிடித்து வாகன ஓட்டிகள் செல்லவும், போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வரும்  வகையில் பணிகளை மேற் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

   இதில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை  காவலர்கள், தலைமை எழுத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.