திருவாரூர், ஏப்.11- வக்கீல்தான் வாய்தா வாங்கு வார்கள். ஆனால் உலக மகா தேர்தல் பத்திர ஊழலில் பாஜக அரசு வாய்தா கேட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலை வர் கு.செல்வப் பெருந்தகை விமர்சித் துள்ளார். நாகை நாடாளுமன்றத் தொகுதி யின் இந்திய கூட்டணி வேட்பாளர் வை.செல்வராஜூவை ஆதரித்து திரு வாரூர் தெற்கு வீதியில் புதன்கிழமை மாலை தேர்தல் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது: ஒன்றிய மோடி அரசு விவசாயி களின் கோரிக்கையை ஏற்று எதை யும் செய்யவில்லை. விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வில்லை. ஆனால் கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு வரி குறைப்பு செய்தது, மட்டுமல்லாமல் பல லட்சம் கோடிக்கு கடன் தள்ளுபடி யும் செய்துள்ளது. இதிலிருந்து தெரி கிறது இது கார்ப்பரேட் பெரும் முத லாளிக்கான அரசு என்று. பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக அரசு மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை என்பதை நாடே அறி யும். தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தல் அறிக்கை யில் சொல்லாததையும் செய்து வரு கிறது. பெருந்தலைவர் காமராஜர் மாணவர்களுக்கு மதிய உணவு அளித்தார். தற்போது நமது தமிழக முதல்வர் மாணவர்களுக்கு காலை உணவு அளித்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் கூறாத புதுமை பெண் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளார். இப்படி மக்களுக்கு நன்மையை கொடுப் பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா? மக்களிடமிருந்து எடுப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். வக்கீல்தான் வாய்தா கேட்பார் கள்; ஆனால் உலக மகா ஊழல் தேர்தல் பத்திர வழக்கில் பாசிச பாஜக அரசு வாய்தா கேட்டதை மக்கள் மறந்து விடுவார்களா. எடுப்ப வர்களுக்கும் கொடுப்பவர்களுக் கும் நடைபெறும் தேர்தல் இது. எனவே நீங்கள் அனைவரும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி வேட்பா ளர் வை.செல்வராஜுவுக்கு கதிர் அரி வாள் சின்னத்தில் வாக்களித்து அவ ருக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்திற்கு நாகை நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு தலைவரும், திமுக மாவட்டச் செய லாளருமான பூண்டி கே.கலைவா ணன் தலைமை வகித்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினரும், பணிக் குழு செயலாளருமான எம்.செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன், செயலாளர் அன்பு.வீரமணி மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.