districts

img

கோவாவில் நடந்த சர்வதேச அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்ற அரசுப் பள்ளி ஆசிரியைக்கு பாராட்டு

தஞ்சாவூர், டிச.19 - தேசிய அளவில் கோவா வில் நடைபெற்ற, அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்ற பட்டுக் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை எஸ்.சத்யாவை, மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர், மாவட்டக் கல்வி அலுவ லர் ஆகியோர் பாராட்டினர்.  மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவியி யல் அமைச்சகம் சார்பில், சர்வ தேச அறிவியல் திருவிழா, டிசம்பர் 10 முதல் 13 ஆம் தேதி  வரை கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற் றது. இதில் புதுமையான கருத்துகளை அடிப் படையாகக் கொண்டு 6 முக்கியமான நோக் கங்களின் கீழ் 12 நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், கோவாவின் கிராமப்புற மாண வர்களை கொண்டு நடைபெற்ற, ‘பன்னாட்டு  அளவிலான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களின் கூட்டமைப்பு’ என்ற  பிரிவின்கீழ், “ஆகார் கிரந்தி” என்ற  நிகழ்வை விளக்கிக் கூறியும், தேசிய அள விலான ஒருங்கிணைப்பு குழுவில், தமிழ் நாடு மாநில அளவில் 5 ஆசிரியர்களில் ஒருவ ராக இருந்து சிறப்பாக செயல்பட்டதற்காக, ஆசிரியர் சத்யாவுக்கு பங்கேற்பு மற்றும் பாரா ட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  பாராட்டு சான்றிதழ் பெற்று, அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள அரசுப் பள்ளி  ஆசிரியை சத்யாவை, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.சிவக்குமார், பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் கே.திராவிடச் செல்வன், பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.இந்திரா சாந்தி மற்றும் சக  ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்த னர்.