districts

img

வாரியங்காவல் தெருக்களில் 44 கேமரா பொருத்தம் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

அரியலூர், ஜன.15 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரியங்காவல் பகுதியில் அடிக்கடி திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  இதனை தவிர்க்கும் விதமாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆலோசனையின் பேரில் வாரி யங்காவல் ஊராட்சியில் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான திறப்பு விழா மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலை மையில் நடைபெற்றது. முன்னதாக வாரியங் காவல் ஊராட்சி மன்ற தலைவர் மணிசேகர் வரவேற்று பேசினார். ஜெயங்கொண்டம் போ லீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன், பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பங்கேற்று கண்காணிப்பு கேம ராவை இயக்கி வைத்து உரையாற்றினார். வாரியங்காவல்  ஊராட்சி மன்ற தலைவர் மணிசேகர், அடிக்கடி திருட்டு நடைபெறும் இடங்களான தெற்குதெரு, சுப்பிரமணியன் கோயில் தெரு மற்றும் முக்கிய கோயில்கள் முன்பு என தனது சொந்தப் பணத்தில் பல்வேறு இடங்களில் 44 கண்காணிப்பு கேம ராக்களை பொருத்தியுள்ளார். மேலும் 27 கேம ராக்கள் பொருத்த ஏற்பாடு நடந்து வருகிறது.  ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய சொந்த பணத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருப்பது மிகவும் பாராட்டத்தக் கது. முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர்  அன்பழகன் நன்றி கூறினார்.