மயிலாடுதுறை, ஏப்.5- திமுக தலைமையி லான ‘இந்தியா’ கூட்டணி யின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பா ளர் ஆர்.சுதா கை சின்னத் திற்கு வாக்குக் கேட்டு, வெள்ளியன்று செம்பனார் கோவில் பகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கஞ்சாநகரம், மேலை யூர், கீழையூர், கிடாரங்கொண்டான், தலைச் சங்காடு, கருவி, மேலப்பெரும்பள்ளம், கீழப் பெரும்பள்ளம், ஆக்கூர், மடப்புரம், செம்ப னார்கோவில், ஆறுபாதி உள்ளிட்ட பகுதி களில் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர் கள், தொண்டர்களுடன் சுட்டெரிக்கும் வெயி லையும் பொருட்படுத்தாமல் கை சின்னத் திற்கு வாக்குகளை சேகரித்தார். வாக்குச் சேகரிப்பின் போது, ஏராள மான பெண்களும், பொதுமக்களும் வேட்பா ளருக்கு சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பிரச்சாரத்தின் இடையே மேலப்பெரும் பள்ளத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு வேட்பாளர் சுதா பேசுகையில், “சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், சட்டத்துறை அமைச்சராக இருந்த போது பெண்களுக்கு சொத்துரி மையில் சம பங்கு வேண்டும் என்ற மசோ தாவை கொண்டு வந்தார். ஆனால் அந்த மசோ தாவை அப்போது சிலர் நிராகரித்தனர். இதனை கண்டித்து, தனது சட்டத்துறை அமைச்சர் பதவியையே அம்பேத்கர் ராஜி னாமா செய்தார். அதன்பின், அவரது கனவை நனவாக் கும் வகையில் தமிழ்நாட்டில் கலைஞர், பெண்களுக்கு சொத்துரிமையில் சம பங்கு என்ற சட்டத்தை கொண்டு வந்தார். இச்சட்டத்தை இந்தியாவில் சோனியா காந்தி யும், மன்மோகன் சிங்கும் கொண்டு வந்தனர். தற்போது அம்பேத்கரின் வரலாற்றை நரேந்திர மோடி மறைக்கப் போராடுகிறார். அது ஒருபோதும் நடக்காது. நரேந்திர மோடியின் மதரீதியான அரசியலுக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் கைச் சின்னத் தில் வாக்களியுங்கள்” என்றார். பிரச்சாரத்தின் போது, திமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப் பாளர் ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் அன்பழ கன், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் வேணுகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூம்புகார் தொகுதி பொறுப்பாளர் அன்புச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணகி, வீ.எம்.சரவணன், சிபிஐ ஒன்றி யச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.