தஞ்சாவூர், ஜன.23- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் கரிகாற்சோழன் கலையரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கி ணைந்த பள்ளிக் கல்வி சார்பில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக் கான மாநாடு - 2024 மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமையில் செவ் வாயன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பேசு கையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,375 அரசுப் பள்ளிகளின் மாண வர்கள் முன்னேற்றத்திற்காக, பள்ளி மேலாண்மைக் குழுவினர் பணியாற்று கின்றனர். தனியார் பள்ளிகளின் நிர்வாகி களைப் போல அரசுப் பள்ளிகளை நிர்வ கிக்கும் பொறுப்பு குழுவினர் அனை வருக்கும் உண்டு. தமிழக அரசு தருகிற நிதி ஆதாரங்களைக் கொண்டு, பள்ளி கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கி யத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும். பள்ளிகளின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப் பட்ட துறை அலுவலர் மூலம் நடவ டிக்கை எடுத்து ஒத்துழைப்பு நல்கும்” என்றார். மாநாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.