புதுக்கோட்டை, நவ.20 - மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை மாதந் தோறும் மீண்டும் நடத்த வேண்டுமென தமிழ்நாடு மீன்படி தொழிற்சங்க கூட்ட மைப்பு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப் பின் மாவட்டச் செயலா ளர் கரு.ராமநாதன் தலைமை யில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்பு மணவாளன், சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ. வெங்கடேசன், துணைச் செயலாளர் முகமது கனி உள்ளிட்டோர் கொண்ட குழு வினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள் கிழமை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதா வது: புதுக்கோட்டை மாவட்டத் தில் மணமேல்குடி, ஆவுடை யார்கோவில் பகுதிகளை உள்ளடக்கி வங்கக்கடலில் சுமார் 50 கிலோமீட்டர் கடற் கரை பரப்பு உள்ளது. இப்பரப் பில் 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் உள்ளனர். பொதுவாக மீனவர்க ளின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதற்காக வும், அரசுத் திட்டங்களை மீன வர்கள் தெரிந்து கொள்வதற் காகவும் கடந்த 2020 ஆம் ஆண்டுவரை மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், 2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீனவர் குறைதீர்க்கும் கூட்டங் கள் நடைபெறுவதில்லை. மாதந்தோறும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் மீன வர்கள் குறைதீர்க்கும் கூட்டங்களை மீண்டும் நடத்த வேண்டும். மேலும், மீன்வளத்தைப் பாதிக்கும் வகையில் அரிவலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மாக மீன் பிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுப்படகு மீன வர்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாத்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.