districts

img

மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தை தடுத்த போலீசாருக்கு கண்டனம்

கரூர், அக்.30 - மோடி அரசின் அமலாக்கத்துறை ஆய்வையொட்டி, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் மணல் குவாரிகள், நியாய மற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் பண்டிகை காலத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்களும், கால்நடை களும் பட்டினியை நோக்கித் தள்ளப்படு கின்றனர். எனவே மணல் குவாரிகளை உடனே  செயல்படுத்த வேண்டும். மாட்டு வண்டி களுக்கு மட்டுமே மணல் விநியோகம் செய்ய  வேண்டும். ஒப்பந்த முறையில் அரசே நேரடி யாக மணல் எடுத்து விநியோகிக்கும் என்ற  அறிவிப்பை வெளியிட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின்  (சிஐடியு) கரூர் மாவட்டக் குழு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடைபெற இருந்தது. அப்போது தாந்தோணிமலை காவல் துறையினர் மணல் மாட்டுவண்டி தொழி லாளர்களை போராட்டம் நடத்தவிடாமல் தடுத்து நிறுத்தி, சங்க நிர்வாகிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். ஒலி பெருக்கிகளை அனுமதிக்க முடி யாது. ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை  என்று கூறி போராட்டத்தை தடுத்தனர்.  மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சி யரிடம் கொண்டு செல்வதற்கு, ஆட்சியர் அலு வலகம் முன்புதான் போராட்டம் நடத்து வோம் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தும்,  அடக்குமுறையை மேற்கொண்டு, அதிக மான போலீசாரை குவித்து காவல்துறை யினர் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் இந்த செயலை சிஐடியு கடுமையாக கண்டித்துள்ளது. பின்னர் கோ ரிக்கை மனுவை கரூர் மாவட்ட ஆட்சியரி டம் வழங்கினர்.