திருச்சிராப்பள்ளி, ஏப்.17-
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலா ளரும், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினருமாக இருந்த தோழர் சங்கரின் 19-ஆம் ஆண்டு நினைவு தினம் திருவெறும்பூர் ஒன்றியம் கிளியூரில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஜோதிராமலிங்கம் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க கொடியை சங்கத்தின் மாநில துணை தலைவர் முகமதுஅலி ஏற்றினார். மாவட்டச் செயலாளர் நடராஜன் புகழஞ்சலி செலுத்தினார்.