திருச்சிராப்பள்ளி, ஜன.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம், மணப்பாறை வட்டக்குழு சார்பில் மணப் பாறையில் உள்ள கட்சி அலு வலகத்தில் கட்சியின் முது பெரும் தோழர் என்.சங்க ரய்யா படத்திறப்பு மற்றும் மாமேதை லெனின் நூற் றாண்டு பேரவை ஞாயி றன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித் தார். தோழர் சங்கரய்யா படத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சச்சி தானந்தம் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். புற நகர் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சிதம்பரம், தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாற்றையும், தியாகங் களையும் நினைவு கூர்ந்தார். கூட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். வட்டக் குழு உறுப்பி னர் சீனிவாசன் நன்றி கூறி னார்.