districts

img

தோழர் எஸ்.ஆறுமுகம் படத்திறப்பு

மன்னார்குடி, மார்ச் 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி நகர முன்னாள் செய லாளர் எஸ்.ஆறுமுகம் படத்திறப்பு-புக ழஞ்சலி கூட்டம் சனிக்கிழமை மாலை நடை பெற்றது. கட்சியின் மன்னார்குடி நகரச் செயலாளர்  ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் முன் னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மறைந்த தோழர் ஆறுமுகம் உருவப்படத்தை திறந்து வைத்து புக ழஞ்சலி செலுத்தினார். நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, சிபிஐ மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், திமுக நகரச் செயலாளர் வீரா.கணேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் பி.பாலச்சந்திரன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் ஆர்பிஎஸ்.சித்தார்த்தன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர்.கனகவேல் ஆகியோர் புக ழஞ்சலி உரையாற்றினர். கட்சியின் ஒன்றிய, நகரக் குழு, வர்க்க  வெகுஜன அரங்கத்தினர் மற்றும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து  கொண்டனர்.