திருவாரூர், ஏப்.21- திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், திருக்கண்ணமங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளருமான ஆர்.மணியனின் துணைவியார் ஆர்.எம்.செல்வராணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு காலமானார். அம்மையாரின் படத்திறப்பு திருக்கண்ணமங்கையில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. படத்திறப்புக்கு கொரடாச்சேரி ஒன்றியச் செய லாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலா ளர் வீ.அமிர்தலிங்கம், அம்மையாரின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தி னர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி மற்றும் மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், வர்த்தக வெகுஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர்.