திருச்சிராப்பள்ளி, ஜூன் 2- திருச்சி மாவட்டம் பொன்மலை ரஞ்சிதபுரம் பகுதிகளில் கட்சி கிளைகளை முதன்முதலில் துவங்கியவரும், அடக்கு முறை காலங்களில் கட்சி தலைவர்களுக்கு அடைக்கலம் தந்து பாதுகாத்தவரும், இப்பகுதியில் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டவருமான தோழர். புருஷோத்தமனின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் கட்சியின் ரஞ்சிதபுரம் அலுவல கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுதிக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, தோழர். புருஷோத்தமன் படத்திற்கு மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினார். இதில் மூத்த தோழர் கே.வி.எஸ் இந்துராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்டக் குழு உறுப்பினர் மணிமாறன், பொன்மலை பகுதிச் செயலாளர் விஜயேந்திரன், பகுதிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.