districts

img

தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி 26 ஆம் நினைவு தினம் செவ்வணக்கம் செலுத்திய சிபிஎம் தலைவர்கள்

நாகப்பட்டினம், ஆக.20-

     பண்ணை அடிமையாய் பயணத்தை துவங்கி, ஒடுக் கப்பட்ட மக்களின் தலைவ னாக மாறி, சமூகப் புரட்சி  செய்த பி.எஸ்.தனுஷ்கோடி யின் 26 ஆம் ஆண்டு நினைவு  தினம் தலைஞாயிறு ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா தலைமையில் பி.எஸ்.டி. பிறந்த ஊரான பாங்கல் கிரா மம், நால் ரோட்டில் நடை பெற்றது.  

    முன்னதாக பி.எஸ்.தனுஷ் கோடி நினைவிடத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப் பினரும் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முருகை யன், ஏ.வேணு, டி.லதா, கே. என்.முருகானந்தம், ஒன்றி யச் செயலாளர்கள் டி.வி.காரல் மார்க்ஸ், வீ.டி.கதி ரேசன் உள்ளிட்டோர் மலர்  வளையம் வைத்து செவ் வணக்கம் செலுத்தினர்.

     பின்னர் நால் ரோடு  கடைத்தெருவில் பி.எஸ். தனுஷ்கோடி இம்மக்க ளுக்கு ஆற்றிய தொண்டு களை நினைவு கூறும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி புகழுரை ஆற்றினார்.