districts

img

தோழர் பெ.வீராசாமி காலமானார்

திருச்சிராப்பள்ளி, டிச.24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் முசிறி ஒன்றியக் குழு உறுப்பினரும், விவசா யத் தொழிலாளர்கள் சங்கம்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்பு களில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்த வர் தோழர் வீராசாமி (53).

இவர் உடல் நலக்குறைவால் திங்களன்று காலமானார். புலிவலத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டிருந்த அன்னாரது உட லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜெய சீலன், முசிறி ஒன்றியச் செய லாளர் அசோக், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் பழநிசாமி, புற நகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்ட செயற் குழு, மாவட்டக் குழு, முசிறி  ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து செவ் வணக்கம் செலுத்தினர். பின்னர் அவரது உடல் புலிவலம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.