மன்னார்குடி, அக்.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமுஎகச முன்னாள் மாநில நிர்வாகிகளும் ஒரு வருமான மேடை கலைவாணர் நன்மாற னின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் மன்னார்குடி நகர குழு சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர செய லாளர் ஜி.தாயுமானவன் தலைமை ஏற்றார். கட்சியின் மூத்த தலைவர் பி.சந்திரசேகரன் தோழர் நன்மாறன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி கே.அகோரம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகுபதி, நகரக் குழு உறுப்பினர்கள் தனுஷ்கோடி, கே.பிச்சைகண்ணு, விவசாயிகள் சங்கத்தின் நகர செயலாளர் முத்து கிருஷ்ணன், தமுஎகச செயலாளர் தியாக.சிவசுப்பிரமணியன் பேசினர்.