districts

திருச்சி முக்கிய செய்திகள்

தோழர் என்.சங்கரய்யா  பிறந்த நாள் விழா 

தஞ்சாவூர், ஜூலை 16 -  பொதுவுடமைப் போராளி, தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யாவின் 103 ஆவது பிறந்த நாள் விழா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாநகரக்குழு  சார்பில், கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெய பால் ஆகியோர் பேசினர். இதில் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் என்.சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள்  என்.குருசாமி, இ.வசந்தி, அரங்கத் தோழர் புண்ணிய மூர்த்தி, மாநகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கல்

தஞ்சாவூர், ஜூலை 16-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, பேரா வூரணி டாாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி சார்பில் நோட்டு,  பேனா வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறு வனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமையில், குமரப்பா பள்ளியில் பயிலும் மாணவர்களின் பங்களிப்புடன்,  பேராவூரணி அருகே உள்ள கூப்புளிக்காடு, காலகம், கரம்பக்காடு, நெடுவாசல், ஏனாதிக்கரம்பை-வீரராகவ புரம், நாடங்காடு, மேலஒட்டங்காடு ஆகிய தொடக்கப்  பள்ளியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில் ஆகிய பொருட்களை குமரப்பா  பவுண்டேசன் பொருளாளர் அஸ்வின்கணபதி மற்றும் குமரப்பா பள்ளி மாணவர்கள் வழங்கினர்.

புத்தகப்பை வழங்கல்

பாபநாசம், ஜூலை 16 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த  நிகழ்ச்சியில் 40 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை பாப நாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி வழங்கினார். இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா, பேரூராட்சி கவுன்சிலர் முத்துமேரி உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.