districts

img

தோழர் எம்.உடையப்பன் 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்கோட்டை, மே 13 -

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் செயற் குழு உறுப்பினரும், கறம்பக்குடி பேரூ ராட்சியின் முன்னாள் தலைவருமான எம். உடையப்பனின் மூன்றாம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்ச்சி கறம்பக்குடியில் சனிக் கிழமை நடைபெற்றது.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினராகவும், கறம்பக்குடி பேரூ ராட்சியில் இரண்டு முறை தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் எம்.உடையப்பன். விவசாயிகள் சங்கம், விவசா யத் தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப் புகளில் மாவட்டப் பொறுப்பாளராக இருந்து  திறம்படப் பணியாற்றியவர்.

  இந்நிலையில் தோழர் எம்.உடையப்பன் கடந்த 13.5.2020 அன்று மாரடைப்பால் கால மானார். அவரது மூன்றாமாண்டு நினைவஞ் சலி கறம்பக்குடியில் சனிக்கிழமை நடை பெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் த.அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பொன்னுச் சாமி, எம்.பாலசுந்தரமூர்த்தி, ஒன்றியச் செய லாளர் பி.வீரமுத்து உள்ளிட்டோர் அவரது  உருவப்படத்திற்கு புகழஞ்சலி செலுத்தினர்.