districts

img

தோழர் கே.வரதராசன் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருச்சிராப்பள்ளி, மே 16 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலை வர்களில் ஒருவரும், உழைக் கும் மக்களின் ஒப்பற்ற  தலைவரும், கிராமப்புற மக்களை அணிதிரட்ட அய ராது பாடுபட்டவருமான மறைந்த தோழர் கே.வரத ராசனின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி திங்களன்று திருச்சியில் கடைப்பிடிக்கப்பட்டது.  இதையொட்டி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்ட செய லாளர் ராஜா, புறநகர் மாவட்ட  செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சிவராஜ், மாவட்ட குழு  உறுப்பினர்கள் ரெங்கநா தன், சம்பத், சந்தானம், தீக்க திர் திருச்சி பதிப்பு பொது மேலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் பொது மேலாளர் அனந்தராஜன் உள்ளிட்ட பலர் கே.வரதராசன் உருவ படத்திற்கு மலர்தூவி செவ் வணக்கம் செலுத்தினர். இதேபோன்று ஸ்ரீரங்கத் தில் தோழர் கே.வரதராஜன் இல்லம் மற்றும் கட்சி அலு வலகத்தில் நடந்த நினைவு  தின நிகழ்ச்சிக்கு, பகுதி செய லாளர் தர்மா தலைமை வகித்தார். பகுதி குழு உறுப் பினர்கள் பலர் மலர் அஞ்சலி  செலுத்தினர். திருச்சி மத்திய  பேருந்து நிலையத்தில் ஜங்ஷன் பகுதி குழு சார்பில்  நடந்த நினைவு தின நிகழ்ச்சி க்கு பகுதி குழு செயலாளர் ரபீக்அஹமத் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ரேணுகா, மாதர் சங்க மாவட்ட செயலா ளர் சரஸ்வதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திருவெறும்பூர் தாலுகா குழு மற்றும் காட்டூர் பகுதி குழு சார்பில் திருவெறும்பூர் கட்சி அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், திரு வெறும்பூர் தாலுகா செயலா ளர் மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நடரா ஜன், காட்டூர் பகுதிகுழு செய லாளர் மணிமாறன் மற்றும்  ஒன்றிய குழு உறுப்பினர் கள், கிளை செயலாளர்கள் தோழர் கே.வரதராசன் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

;