தஞ்சாவூர், ஜூன் 10-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் கே. முத்தையா நினைவு தினம் மற்றும் நிதி யளிப்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது.
கூட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் (பொ) வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் (பொ) ஆர்.எஸ்.வேலுச்சாமி வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் எம்.இந்துமதி, மூத்த தோழர் வழக்குரைஞர் வீ.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பி னரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். மூத்த தோழர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு மற்றும் பேராவூரணி, சேதுபாவா சத்திரம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், நகரக்குழு உறுப்பினர்கள், தோழமை கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கட்சி நிதி
கூட்டத்தில், சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் சார்பில், ரூ.80 ஆயிரம், பேராவூரணி ஒன்றியம் சார்பில், ரூ.60 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்சி நிதி வழங்கப்பட்டது.
கட்சியில் இணைந்தனர்
பேராவூரணி, ஆதனூர் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 25 பேரும், செந்தலைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.