தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் படிப்பினை நிறைவு செய்த இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவர்களுக்கு கல்லூரியின் அண்ணா கலையரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் துரையரசன் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்து வரவேற்புரையாற்றினார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. மா.செல்வம் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.