மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கடல் சீற்றமாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ஏற்பட்ட கடல் அரிப்பால் டேனிஷ் கோட்டையின் பாதுகாப்பு இரும்பு வேலிச் சுவர் முற்றிலும் சேதமடைந்த நிலையில் கடலரிப்பு அதிகமாகி கோட்டையையொட்டிய சுவரின் மீது கடல் அலை சீற்றமாக மோதி வருகிறது.