districts

img

மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம்

பாபநாசம், ஏப்.24- ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்ட பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி யுள்ளார். இதனால் அவர் மீது  நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி இந்திய தேர்தல் ஆணையர்கள் மற்றும் ராஜஸ் தான் மாநில தேர்தல் ஆணை யர் ஆகியோருக்கு மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் புகார் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தப் புகார் கடிதங்கள், தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் தலைமை தபால் நிலை யத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழக தஞ்சை வடக்கு  மாவட்டச் செயலர் முஹம் மது சலீம், மனிதநேய மக்கள்  கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் முஹமது ரிபாயி, பாபநாசம் ஒன்றியத் தலைவர் கலீல் ரகுமான், ஒன்றியச் செயலர் அஷ்ரப் அலி, பாபநாசம் பேரூர் செயலர் ஜாஹிர் உசேன், சுவாமிமலை பேரூர் தலை வர் புர்க்கான் அலி, அய்யம் பேட்டை பேரூர் செயலர் செல்லப்பா, மாவட்ட விவ சாய அணி செயலர் முஹ மது பாரூக், சமூக நீதி  மாணவர் இயக்க பொறுப்பா ளர் அப்துல்லா உள்ளிட் டோர் பங்கேற்றனர்.