சேலம், ஜூலை 1-
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டம ளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை கட்டுப்பாடு தொடர்பாக காவல் துறையினரின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் சுற்றறிக்கை வெளி யிட்ட துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21 ஆவது பட்டமளிப்பு விழாவையொட்டி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் பங்கேற்கும் இந்த விழாவிற்கு வருபவர்கள் கருப்பு நிற ஆடை கள் அணிவதை தவிர்க்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி, இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுவதாகவும் பல் கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் தெரி விக்கப்பட்டு இருந்தது. பெரியார் பல்கலைக் கழக நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து பட்டமளிப்பு விழா விற்கு முந்தைய நாள் இந்த உத்தரவு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே சேலம் மாவட்ட காவல்துறை மற்றும் மாநகர காவல்துறை சார்பில் அடுத்தடுத்து ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் காவல்துறை சார்பில் இது போன்றதொரு எந்தவிதமான அறிவுறுத்தலும் வழங்கப் படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டி ருந்தது.
இதனிடையே பட்டமளிப்பு விழாவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து காவல் துறை யினரின் மாண்பை சீர்குலைக்கும் வகை யில் சுற்றறிக்கை வெளியிட்ட பெரியார் பல் கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பல்கலைக்கழக தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றறிக்கை வெளி யிட்ட இருவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.