districts

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் நில நிர்வாக ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை, ஏப்.25- நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், நில நிர்வாக ஆணையர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க  வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்த ரவிட்டுள்ளது.  நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த  பாஸ்கர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனு வில், தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிரா மத்தில் காசினி அம்மாள் என்பவருக்கு அரசு  சார்பில் கடந்த 1969ஆம் ஆண்டு நிலம் ஒதுக்  கப்பட்டு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டன.  இந்த நிலையில் இந்த நிலத்தில் காசினி யம்மாளும் அவர் கணவரும் விவசாயம் செய்து வந்தனர் . தொடர்ந்து அவர்கள் வரி  செலுத்தி வந்தனர். இந்த சூழலில் அவர்கள்  இருவரும் இறந்து விட்டனர். தொடர்ந்து வரி  செலுத்தப்பட்டு வருகிறது.  அதன் பிறகு சொத்தை பாகப்பிரி வினை செய்வதற்கு காசினியம்மாளின் வாரிசுகள் பட்டா கோரி ண்ணப்பித்தனர்.அப்போது காசினி அம்மாளின் நிலம் அரசு  புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட் டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் நிலம் ஒப்படைப்பு 1981 ஆம் ஆண்டு ரத்து  செய்யப்பட்டு அரசு புறம்போக்கு என  வகைப்படுத்தப்பட்டு உள்ளது என வரு வாய் துறை அதிகாரிகளால் தெரிவிக்கப் பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த மனுதாரர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு வை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முறையாக வரி  செலுத்தி வருகிறார். உரிய ஆவணங்களை  வைத்துள்ளார். நிலம் ஒப்படைப்பு ரத்து  செய்யபடுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்கவில்லை. எனவே பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கடந்த 2023 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நில நிர்வாக ஆணையர்  உள் ளிட்டோர் மீது நீதிமன்ற. அவமதிப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு வில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன்பு நடைபெற்றது.  பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருந்  தது. இது நாள் வரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.வழக்கு விசார ணைக்கு வரும் போது கடந்த சில மாதங்க ளாக நிறைவேற்றுகிறோம் என்று வாய் மொழியாக கூறுகின்றனர். ஆனால் இது நாள் வரை நிறைவேற்ற வில்லை. எனவே இதுகுறித்து நில நிர்வாக ஆணையர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார். வழக்கு விசாரணையை 4 வாரங்க ளுக்கு ஒத்திவைத்தார்.