மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் பி.ஆர் என்று அன்போடு அழைக்கப்பட்ட தோழர் பி.இராமச்சந்திரனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் ஆதனூர் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், கே.தமிழ்மணி நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலகுரு, எம்.சேகர், எம்.முருகதாஸ், பி.மாதவவேலன், ஆர்.நடராஜன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.