districts

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் நினைவேந்தல்

திருவாரூர், ஜன.3 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் திருவாரூர் மின் திட்ட செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னராக செயல்பட்டவருமான மறைந்த தோழர்  ஜி.ராமகிருஷ்ணனின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருவாரூரில் நடை பெற்றது. திருவாரூர் திட்ட அலுவலகம் முன்பாகவும், சிஐடியு மாவட்ட அலுவல கத்திலும், அவரது இல்லத்திலும் அவரது உருவபடத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு திட்ட  செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமை யேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் டி. முருகையன், தொழிற்சங்க தலைவர் ஜி.பழனிவேல், சிஐடியு முன்னணி நிர்வாகி கள் கலந்து கொண்டனர். ஒப்பந்த தொழிலா ளர்களின் நலனுக்காக தொடர்ச்சியாக போராடி உரிமைகளைப் பெற்றுத் தந்த தோ ழருக்கு திரளான ஒப்பந்த தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.