தஞ்சாவூர், அக்.14- ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லூரிக்கு, ‘எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ என பெயர் சூட்டியமைக்காக தமிழக முதல்வ ருக்கு கல்லூரி மாணவ, மாணவியர் நன்றி தெரி வித்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்.11 அன்று, சட்டப்பேரவையில், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண் மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ‘டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என அழைக்கப்படும் என்றும், தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபி யல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு ‘டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன்’ பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை கொண்டாடும் வகை யில், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும், அதற்கான பெயர் பலகையும், எம்.எஸ்.சுவாமிநாதன் உருவப் படத்தையும் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது மாணவ-மாணவிகள், வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரை இக்கல் லூரிக்கு அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரி வித்தனர். நிகழ்ச்சியில் டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் ஏ.வேலாயு தம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா மற்றும் கல்லூரி பேராசிரி யர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.