கும்பகோணம், மார்ச் 1- தனியார் பேருந்தின் லாபவெறியால், கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த நிலையில், மாணவரின் குடும்பத்திற்கு இழப் பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் கணினி அறி வியல் துறையில் படித்து வந்தவர் மாண வர் கார்த்திகேயன். இவர் வழக்கம்போல் கல்லூரி முடிந்து, அருகே புளியம்பேட்டை யில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அதிவேக மாக, அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் பேருந்து மாணவர் கார்த்திகேயன் மீது மோதியது. இந்த விபத் தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் இறந்த கார்த்திகேயனுக்கு கும்பகோணம் அரசு கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் சக மாணவர்கள் சார்பில் அஞ்சலி கூட்டம் நடை பெற்றது. மேலும், லாப வெறியோடு அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளை கட்டுப்படுத்த வேண்டும். மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.