கரூர், மார்ச் 8 - கல்லூரி பயிலும் மாணவர் களின் புத்தாக்க கண்டுபிடிப்பிற் கான ஹேக்கத்தான் 2023-24 நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகள் இணையதளம் https://www.edii-innovation.tn.gov.in/ என்ற வழியாக பெறப் படுகின்றன. இதுகுறித்து தொழில் முனை வோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் செ.உமாசங்கர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க சிந்தனைகளை கல்லூரி பயிலும் மாணவர்கள் மத்தியில் உருவாக்குவதற்காக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் கல்லூரி மாணவர்களுக்கு ஹேக்கத் தான் போட்டிகளை 2017ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இதில் பங்குபெறும் மாணவர் கள் புத்தாக்க முறையில் சந்தைப் படுத்தக் கூடிய புதிய பொருட்களின் மாதிரிகளை உருவாக்க வேண்டும். (The Students have to generate innovative ideas & convert their ideas into marketable product prototype). இவ்வாறு உருவாக்கப் படும் சிறந்த மாதிரி பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் 25 மாணவ அணிகளுக்கு, முதல் பரிசாக தலா ரூபாய் ஒரு லட்சம் என அரசு வழங்கி வருகிறது. இதுவரை 136 மாணவர் அணிகளுக்கு ரூ.1.14 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறி வியல் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகள், மீன்வளக் கல்லூரி கள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Polytechnics) மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள்(ITI) போன்ற 1700-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களைச் சார்ந்த 3.20 லட்சம் மாணவர்கள், இந்த போட்டிக்கு பயிற்சி பெற்று பங்கேற்று வருகின்ற னர். இந்த ஆண்டில் முதல் 20 அணிகளுக்கு முதல் பரிசு தலா ஒரு லட்சம், அடுத்து 60 அணிகளுக்கு இரண்டாம் பரிசு ரூ.25,000 வழங்கப் படும் (மேலும் அதிக அணிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கிட வாய்ப்பு உள்ளது). ஒவ் வொரு நிலையிலும் மாணவர் களுக்கு பங்கேற்பாளர்கள் சான்று, பாராட்டுச் சான்று, மாணவர் வழி காட்டிகளுக்கு சான்றிதழ், சிறந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு சான்றுகள் வழங்கப்படும். இப்போட்டிக்கான மாணவர் கண்டுபிடிப்புகள் https://www. edii-innovation.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. புத்தாக்க சிந்த னைகளை பதிவு செய்வதற்கான கடைசி தேதி 20.3.2024 மாலை 5 மணி. மாணவர்கள் இதில் பங்கேற்க விரும்பினால், தங்களது கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தாமதமின்றி, மாணவ வழி நடத்துநர் வழியாக புத்தாக்க சிந்தனைகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.