திருவாரூர், ஜூன் 12 -
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கோடை விடு முறை முடிந்து பள்ளி திறப்பு நாளில் மாணவ, மாணவியர் களுக்கு பாடப் புத்தகங் களை மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ வழங்கி வரவேற்றார்.
திருவாரூர் மாவட்டத் தில் கோடை விடுமுறை முடிந்து 66 அரசு உயர் நிலைப் பள்ளிகள், 12 உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி கள், 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி கள், 206 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், 29 உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் என 481 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கப்பட்டன.
காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் வரவேற்று புத்த கங்களை வழங்கி மாணவர் களுக்கு அறிவுரை கூறினார். நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புக ழேந்தி, காட்டூர் ஊராட்சி மன்றத்தலைவர் விமலா பிரபாகரன், பள்ளி தலைமை யாசிரியர் ஜீவரேகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.