கும்பகோணம், ஜன.3 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, ஏரகரம் ஊராட்சியில் அமைந்துள்ள கிராம ஊராட்சி சேவை மையத்தில், மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமை, கும்பகோணம் கோட்டாட்சியர் செ.பூர்ணிமா முன்னிலையில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் துவக்கி வைத்தார். கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சிவக்குமார், ம.ஆனந்தராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் வரலெட்சுமி ரமேஷ்குமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.