பாபநாசம்,ஆக .22- பாபநாசம் அருகே திருக்கருகாவூரில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. முகாமை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன், திமுக அம்மாப் பேட்டை வடக்கு ஒன்றியச் செயலர் சுரேஷ், அம்மாப் பேட்டை பி.டி.ஓ ராஜன், பாபநாசம் தாசில்தார் செந்தில் குமார், மாவட்டக் கவுன்சிலர் ராதிகா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொத்தங்குடி பழனி, பெருமாக்க நல்லூர் இராமநாதன், கோவத்தக்குடி கிருஷ்ண வேணி உட்பட பலர் பங்கேற்றனர். இதில் மின்சாரம், வருவாய், காவல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஆதி திராவிடர் நலம், பிற்பட்டோர் நலம், வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சி, கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகள் பங்கேற்றன. கொத்தங்குடி, அன்னப்பன் பேட்டை, வையச் சேரி, பெருமாக்க நல்லூர், காவலூர், கோவத்தக் குடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.