தருமபுரி, ஜூலை 1- கழிவுநீர் கால்வாயில் மண்ணைக் கொட்டி அடைத்துள்ளதால் கால்வாயில் கழி வுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை ஊராட்சிக்குபட்ட டாடா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் வெளியேறு வதற்காக புதிதாக கால்வாய் கட்டப்பட் டது. இதில் டாடா நகர் பகுதியிலிருந்து 600 மீட் டர் நீளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்நிலையில், அதியமான் கோட்டையில் உள்ள வானொலி நிலையம் முன்பு இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தங்கும் விடுதி கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை ஒப்பந் தம் எடுத்தவர், கட்டடப் பணிகளுக்காக பொருட்கள் கொண்டு செல்வதற்கு வசதி யாக, கழிவுநீர் கால்வாய் பகுதியில் மண் ணைக் கொட்டி மூடி சாலை அமைத்துள்ள னர். இதனால் கழிவு நீர் கால்வாய் பயன்பாட் டுக்கு வந்த சில மாதங்களில் மண் கொட்டி மூடப்பட்டதால் 300 மீட்டர் தூரம் வரை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி யில் பின்னோட்டம் வீசுவதோடு சுகாதார சீர் கெடும் ஏற்பட்டுள்ளது. எனவே மண் கொட்டி அடைக்கப்பட்ட பகுதியில் சிமெண்ட் குழாய் கள் பதித்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.