districts

img

டேனிஷ் கோட்டையில் தூய்மைப் பணி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை மற்றும் டேனிஷ் கோட்டை பகுதிகளில்  தூய்மைப் பணி ஞாயிறன்று நடைபெற்றது. கேரளா மாநில தலைமைத் தேர்தல் அலுவலர்  சஞ்சய் கவுல், ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், தரங்கம்பாடி பேரூராட்சித் தலைவர் சுகுணா சங்கரி, துணைத்தலைவர் பொன் ராஜேந்திரன், வட்டாட்சியர்  .காந்திமதி. பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன், குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவர்  மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.