districts

நகர வர்த்தகர் கழகத்தின் முயற்சி வெற்றி மீண்டும் ரயில் முன்பதிவு மையம் துவக்கம்

தஞ்சாவூர், ஏப்.6-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத் தில் ரயில்வே முன்பதிவு மையம் தற்போது துவக்கப் பட்டுள்ளது.  பேராவூரணி ரயில் நிலையத்தில், ஏற்கனவே மீட்டர் கேஜ் ரயில் சேவை  காலத்தில் ரயில் முன்பதிவு மையம் இயங்கி வந்தது. காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணி களுக்காக கடந்த 2012 ஆம்  ஆண்டு இந்த வழித்தடத் தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றன.  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு டெமு ரயில் சேவை தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இவ்வழியாக காரைக்குடி -  திருவாரூர் - தாம்பரம் ரயில்  உள்ளிட்ட ஒரு சில சிறப்பு  விரைவு ரயில்கள் இயக்கப் படுகின்றன. 2012 ஆம் ஆண்டு வரை ரயில்வே முன்பதிவு மையம் பேரா வூரணி ரயில் நிலையத்தில் இயங்கி வந்தது. 2022 இல்  மீண்டும் ரயில் சேவை தொ டங்கப்பட்ட பிறகு, முன்பதிவு மையம் அமைக்கப் படாமல் இருந்தது.  இதுகுறித்து பேராவூ ரணி சட்டப்பேரவை உறுப்பி னரும், வர்த்தகர் கழக முன்னாள் தலைவருமான நா.அசோக்குமார், நகர வர்த்தகர் கழகம், கிழக்கு கடற்கரை ரயில் பணிகள் சங்க கூட்டமைப்பு தலை வர் சாமி.திராவிட மணி, ஒருங்கிணைப்பாளர் எஸ். ஆர்.எம். பாலசுப்பிர மணியன் மற்றும் பேரா வூரணி ரயில் பயணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மீண்டும் பேராவூரணி ரயில் நிலை யத்தில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் பேராவூரணி ரயில் நிலை யத்தில் முன்பதிவு மையம், தென்னக ரயில்வே துறை யால் மீண்டும் துவக்கப் பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை  இந்த முன்பதிவு மையம்  இயங்கும் எனக் கூறப்படு கிறது.   மீண்டும் முன்பதிவு மையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொரு ளாளர் சாதிக் அலி, கட்டுப் பாட்டு கமிட்டி உறுப்பினர் எஸ்.கந்தப்பன், வர்த்தகர் கழக நிர்வாகி சீனி.கௌத மன், லயன்ஸ் சங்க தலை வர்கள் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.