districts

img

மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறந்திடுக!

தஞ்சாவூர், டிச.29 - மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறந்திட, தமிழக முதல்வர் தலையிடக் கோரி  மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார்பில்  தஞ்சாவூர் நீர்வள ஆதாரத் துறை செயற்பொ றியாளர் அலுவலகம் முன்பு புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.  கொரோனாவால் மூடப்பட்ட கொத்தங் குடி, திருச்சென்னம்பூண்டி, சின்ன ஆவுடை யார் கோயில், மணல் குவாரிகளை ஊரடங்கை  தளர்த்தி உடனே திறக்க வேண்டும். கொள்ளி டம் ஆற்றில் புதிதாக திறக்க உள்ள மணல் குவாரிகள் வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச் சேரி, மரூர், சாத்தனூர் ஆகிய இடங்களில் மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க அனு மதி வழங்க வேண்டும். லாரிகளில் மணல் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது.

 மாட்டு வண்டியில் மட்டும் மணல் எடுக்க  தேர்வு செய்யப்பட்ட முள்ளங்குடி, நடுப்ப டுகை, தொக்காலிக்காடு, பெத்தனாட்சி வயல் மணல் குவாரிகளை உடனே திறந்து,  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம், தஞ்சை மாவட்ட  முறைசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  காத்திருப்பு போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் சா. ஜீவபாரதி கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் என்.வி.கண்ணன், முறைசாரா  தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிஐடியு மாவட்ட  துணைச் செயலாளர் கே.அன்பு, தரைக்கடை  சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், மாட்டு வண்டி சங்க நிர்வாகிகள் திருப்பனந்தாள் கோவிந்தராஜ், திருவிடைமருதூர் கைலா சம், கும்பகோணம் லட்சுமணன், செந்தில்குமார்,  பட்டுக்கோட்டை சோமசுந்தரம், மூர்த்தி, சேது பாவாசத்திரம் அலெக்சாண்டர், பாபநாசம் நாகராஜன், பூதலூர் ரமேஷ், இமானுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், உதவி  செயற்பொறியாளர் ரஜினி உள்ளிட்ட அதிகாரி கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  சமா தானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், 17.1.2022-க்குள் மாட்டு வண்டிகளுக் கான மணல் குவாரிகளை திறப்பதற்கான உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்தி ருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.