போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்
கும்பகோணம், ஜன.22- கும்பகோணம் , கார்த்தி வித்யாலயா பள்ளியில் சாலை போக்குவரத்துக்கு வாகன விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கும்பகோணம் வட்டார போக்குவரத்துக் அலுவலர் கோகிலா,மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு ஆகி யோர் மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து விதிமுறை களை விளக்கினர். முகாமில் 500 க்கும் மேற்பட்ட மாண வர்கள் உறுதி மொழியேற்றனர். . விழிப்புணர்வு நிகழிச்சியை ஏற்பாடு செய்த பள்ளி தலைவர் கார்த்திகேயன் , பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் ஆகியோரை மாணவர்களின் பெற்றோர்கள் பாராட்டினர்.
சிஐடியு திருச்சி புறகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு
திருச்சிராப்பள்ளி, ஜன.22 - சிஐடிய திருச்சி புறகர் மாவட்டக்குழு விரிவடைந்த கூட்டம் புதனன்று மாவட்ட தலைவர் சம்பத் தலைமை யில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.சி. கோபிகுமார் பங்கேற் றார். கூட்டத்தில் சிஐடியு புறநகர் மாவட்ட தலைவராக பி. தியாகராஜன், மாவட்ட செயலாளராக எஸ்.சம்பத், துணைச்செயலாளர்களாக எம். ஆனந்தன், ஏ. கனக ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜன.25 கரூரில் பொது விநியோக குறைதீர் கூட்டம்
கரூர், ஜன.22- கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கை பேசி எண் பதிவு மற்றும் பொது விநியோக கடை களின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடு கள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஜனவரி 25 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. கரூர், அரவக்குறிச்சி, மண்மங்க லம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்படி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் -2013 தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இக்கூட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், தெரிவித்துள்ளார்.
வானில் கோள்கள் நிகழ்த்தும் அற்புதம் திருச்சி கோளரங்கத்தில் பார்வையிட ஏற்பாடு
திருச்சிராப்பள்ளி, ஜன.22- திருச்சிராப்பள்ளி அண்ணா அறிவியல் மையம் கோள ரங்கம் திட்ட இயக்குனர் அகிலன் கூறியிருப்பதாவது: வானியலில் ஒரு அற்புத நிகழ்வாக கடந்த 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் கிழக்கு திசையில் காணப்படும். காலையில் கிழக்கு திசையில் பயணிக்கும் கோள்கள் மாலையில் மேற்கு திசையில் இரவு நெருங்க நெருங்க மறைய செவ்வாய், சனி, வியாழன், வெள்ளி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவது அபூர்வ மான நிகழ்வாகும். இந்த அற்புதத்தை அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் , ஜனவரி 22 முதல் 25 ஆம் தேதி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் தொலைநோக்கி மூலம் பார்வையிட வாய்ப்பளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 5 கோடி நிலம் மீட்பு
தஞ்சாவூர், ஜன.22 - தஞ்சாவூரில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை மீட்டனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் கிருஷ்ணா நகரில் 9 ஏக்கர் பரப்பிலான நிலம் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதை தனி நபர் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து, மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பாபு, நகர அலுவலர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் தொடர்புடைய இடத்தை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, ஏறத்தாழ ரூ. 5 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமையன்று மீட்டு, பாதுகாப்பு வேலியும் அமைத்தனர். மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகையையும் அமைத்தனர்.
கிராமசபைகளில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஜன.22 - “ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும். அதனை ஒரு விவாதப் பொருளாக தீர்மானத்தில் இணைக்க வேண்டும்” என வலியுறுத்தி பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தி.தனபால், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொ.சரிதா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவ.ரவிச்சந்திரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடமும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடமும் கோரிக்கை மனுவை வழங்கினர் . மேலும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், வட்டார வளர்ச்சி அலுவலர்களை நேரில் சந்தித்து மனுவின் நகல் வழங்கப்பட்டு, கிராம சபை கூட்டத்தில் கல்வி வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இலவச கண் பரிசோதனை முகாம்
பெரம்பலூர், ஜன.22- தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்ட போக்குவரத்துக் காவல்துறையின் சார்பில் ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார். முகாமில் 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கண் பரிசோதனைக்கு வந்திருந்த ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரங்களையும், மரக்கன்றுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 293 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பு
தஞ்சாவூர், ஜன.22 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில், விவசாயிகளிடமிருந்து நெல்கொள்முதல் செய்ய வசதியாக 293 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அருகில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்கொள்முதல் செய்வது தொடர்பான புகார்களை தஞ்சாவூர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் 04362-23582/236088 என்ற தொலைபேசி எண்ணிற்கு தெரிவித்திடலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஜன.24 திருவாரூரில் வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூர்,ஜன.22- திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தும் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் கூட்டுறவு நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற ஜனவரி 24- வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இத்தனியார்துறை முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைநாடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை Download செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது
பெரம்பலூர்,ஜன.22- ஆன்லைன் மூலம் 16 லட்சம் மோசடி செய்தவர் கைது. பெரம்பலூர் அருகே துறைமங்க லத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகி, திருமண ஆசை மற்றும் இரயில்வே துறையில் அரசு பல் மருத்துவர் வேலை வாங்கித் தரு வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.15,95,000-யை வங்கி கணக்கு கள் மூலம் . பெற்று ஏமாற்றிவிட்ட தாக பெரம்பலூர் மாவட்ட, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், தனிப்படை அமைத்து மோசடியா ளர்களை தேடி வந்தனர். இந்நிலையில் மோசடியாள ரின் இருப்பிடம் அறிந்து ஆந்திரப் பிரதேசம் மாநிலம், ஸ்ரீ சத்யா சாய் மாவட்டம் கதிரிக்கு சென்றனர்.அங்கு விசாரணை நடத்தி பி. பரத் என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடமிருந்து 2 செல்போன்கள், 02 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டு, அவரை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ஜன.24 தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு முகாம்
தஞ்சாவூர், ஜன.22 - தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக, வேலை தேடும் இளைஞர்களுக்காக ஜனவரி 24 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணிவாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் செயற்கை தொழில்நுட்பம் குறித்து பாடங்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
திருச்சிராப்ப ள்ளி,ஜன,22- தமிழக அரசின் பள்ளிக்கல் வித் துறை சார்பில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்ட மாநாடு திருச்சியில் செவ்வாயன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வரவேற்றார். தமிழக பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகை யில்: நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சர் வழங்கிய ரூ 5 லட்சம் நிதியுடன் தொடங்கப்பட்டது தற்போது இந்த திட்டத்தில் சுமார் 500 கோடி ரூபாய் நிதி உள்ளது. பல்வேறு நிறுவ னங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலம் வழங்கப் பட்டுள்ள இந்த நிதியின் மூலம் அரசு பள்ளியிலும் அடிப்படை கட்டமைப்புகள் நவீன தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேம் படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் இந்த திட்டத்திற்கு 31 நிறுவனங்கள் 141 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளன. உலக தரத்தில் மாணவர்களின் கல்வி அறிவை வளர்ப்பதற்காக தமிழக பள்ளிகளில் ஏ ஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய பாடங்களை அமல்படுத்துவது பற்றி ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மாநாட்டில் நம்ம ஊர் பள்ளி திட்டத்தின் தலை வர் வேலு சீனிவாசன், எம்பிக்கள் துரை வைகோ, திருச்சி சிவா, இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழக தலைவர் ஸ்ரீவத்ஸ்ராம் ஆகியோர் பேசினர். முடிவில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா நன்றி கூறினார்.