districts

img

டாக்ஸி நிலையம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.22 - டாக்ஸி நிலையத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி தெப்பக்குளம்  பகுதியில் அங்கீகரிக்கப் பட்ட டாக்ஸி நிலையம் கடந்த  40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த  டாக்ஸி நிலையத்தை ஆக்கிர மிப்பு செய்துள்ளவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வலி யுறுத்தி சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சாலை  போக்குவரத்து சங்க மாவட்டச் செயலாளர் சந்தி ரன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவா சன், தரைக்கடை சங்க செய லாளர் செல்வி, ஆட்டோ சங்க செயலாளர் மணிகண்டன்  ஆகியோர் பேசினர்.