புதுக்கோட்டை, ஜன.30 - கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள குளறுபடிகளைக் களைய வலியுறுத்தி கட்டுமானம், உடல் உழைப்பு, அமைப்புசாரா தொழிற் சங்கங்களின் (சிஐடியு) சார்பில் செவ் வாயன்று நடைபெற்றது. ஆன்-லைன் சான்றாவணங் களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிலாளர் சான்றா வணங்கள் அழிக்கப்பட்டதற்கான காரணங்களை ஆய்வு செய்து, குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவேற்றம் செய்ய வரும் தொழிலாளர்களின் ஒருநாள் வேலை இழப்பை ஈடுசெய்யும் வகை யில் நிவாரணம் வழங்க வேண்டும். ஆன்-லைன் பதிவுடன் மனுக்களை நேரடியாகவும் பதிவு செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். திருமணம் செய்யும் தொழிலாளர்களின் வாரிசு களில் இருவரும் தொழிலாளியாக இருப்பின் இருவருக்கும் பணப்பயன் களை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அன்புமணவா ளன் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் ஏ.ஸ்ரீதர் கண்டன உரையாற்றி னார். கோரிக்கைகளை விளக்கி சங்க நிர்வாகிகள் பேசினர்.
திருவாரூர்
திருவாரூர் தொழிலாளர் நல அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் ஜி.ரகுபதி தலைமை வகித்தார். கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.கே.என்.அனிபா கண்டன உரை யாற்றினார். சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் இரா.மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் வெண்ணைமலையில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் என்.ரங்கராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் தொழிலாளர் நல வாரி யம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.கிருஷ் ணன், துணைத்தலைவர் எஸ்.என்.துரைராஜ், துணைச் செயலாளர்கள் இ. ரெங்கராஜ், எஸ்.மெய்யப்பன் உள்ளிட் டோர் பேசினர்.