இராமநாதபுரம், மார்ச் 16- குவைத்தில் மீன்பிடித் தொழிலுக்காக சென்ற இடத் தில் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யான வழக்கு பதிவு செய்து அய்யர் (எ)சேசு, கார்த்திக், சந்துரு, வினோத் குமார் ஆகிய நான்கு மீனவர்களை சிறையில் அடைத்துள்ளனர். 4 மீனவர்களை உடனே விடுதலை செய்ய நட வடிக்கை எடுத்து, மீட்டு வர வேண்டும். சிறையில் வாடும் ஏழை மீனவர் குடும்பத்தி ற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு கடல் தொழிலாளர் சங்கம் சார்பாக இராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ் நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் அந்தோணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி, கடல் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன், சிஐடியு நிர்வாகி செந்தில் ஆகியோர் பேசினர்.