districts

img

ஒப்பந்தம், அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்யக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.9-  ஒன்றிய, மாநில அரசு நிறுவனங் கள், பொதுத்துறை, தனியார் ஆலை களில் உற்பத்தி பகுதிகளில் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் முறை புகுத்துவதை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே புத னன்று சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் ரெங்கநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அகஸ்டின், மாவட்டப் பெருளாளர் ரெங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவானந்தம், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.