districts

பள்ளியில் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் தொடர்பான கூட்டம்

அறந்தாங்கி, ஜூன் 22-

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளி  செல்லாக் குழந்தைகள், பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்ட றிதல் மற்றும் பள்ளியில் சேர்த்து  நீண்ட நாட்கள் வராத மாணவர் களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் தொடர்பான ஒன்றிய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வட்டார வள மையத்தில் மணமேல்குடி வட்டார கல்வி அலு வலர் செழியன் தலைமையில் நடை பெற்றது.

    அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா னந்தம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) மகாலட்சுமி, மணமேல்குடி வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்வில் மணமேல்குடி காவல்துறை ஆய்வாளர் குணசேக ரன் கலந்து கொண்டு பள்ளிச் செல்லாக் குழந்தைகளை கண்ட றிந்து பள்ளியில் சேர்ப்பதற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தார்.

   கூட்டத்தில் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் படித்து வரும் குழந்தைகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மற்றும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் இடை நிற்றல் பிரச்சனை தீர்ப்பதற்கும் பள்ளி அளவிலான குழுக்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வ தற்கும் மீண்டும் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கும் தேவை யான வழிகாட்டுதல் மற்றும் உதவி களை வழங்குவதற்கும் வட்டார அள விலான குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி மாணவர்களை சேர்க்கை செய்வதற்கான வழிவகை குறித்து விவாதிக்கப்பட்டது.