புதுக்கோட்டை, டிச.25- புதுக்கோட்டையை சேர்ந்த சிறுவர்கள் தாங்கள் சேர்த்து வைத்திருந்த சிறுசேமிப்பு தொகையை வெள்ள நிவாரண நிதிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்ப டைத்தனர். புதுக்கோட்டை சுப்பிரமணி நகரைச் சேர்ந்தவர்கள் விஜயகுமார்-மகேஸ்வரி தம்பதியினர். இவர்கள் ‘நேசக் கரம்’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் முதியோர் இல்லத்தையும், குழந்தைகள் காப்பகத்தை யும் இலவசமாக நடத்தி வருகின்றனர். இவர்களுடைய குழந்தைகள் வி.சந் தோஷ் (7), வி.ரேஷ்மா (4) ஆகிய இருவரும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் தொகை ரூ.3,604-ஐ மழையால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்க முன்வந்தனர். அதன்படி தாங்கள் சேர்த்து வைத்திருந்த தொகையை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்ன துரை, மாவட்ட செயலாளர் எஸ்.கவி வர்மன் ஆகியோரிடம் வழங்கினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மலர்விழி, தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செய லாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.